சனி, 5 ஏப்ரல், 2014

பிள்ளையார் அல்லது விநாயகர் (சமசுகிருதம்: गणेश ;

பிள்ளையார் அல்லது விநாயகர் (சமசுகிருதம்: गणेश; சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: கணேஷா; இந்த ஒலிக்கோப்பு பற்றி கேட்க), இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் ஒருவர்.[1] விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாளும் அறியப் பெறுகிறார்.
விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் (சமசுகிருதம்: गाणपत्य; IAST: gāṇapatya) எனப்படுகிறது. இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றினைந்தது. [2]

பொருளடக்கம்  [மறை]
1 சொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள் 1.1 விநாயகரின் வேறு பெயர்கள்
2 தோற்றம்
3 காணபத்தியம்
4 வரலாறு
5 திருவுருவ விளக்கம் 5.1 திருவடி
5.2 பெருவயிறு
5.3 ஐந்துகரங்கள்
5.4 கொம்புகள்
5.5 தாழ்செவி
6 விநாயகர் மூர்த்தங்கள்
7 முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்=
8 விநாயக சதுர்த்தி
9 தமிழ் நாட்டின் சிறப்பு
10 மேலும் பார்க்க
11 வெளி இணைப்புகள்
12 அடிக்குறிப்பு

சொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள்[தொகு]
தொடர்பான கட்டுரை
இந்து சமயம்

 இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல்
 வைணவம் வலைவாசல்
பா ·  உ · தொ
இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும்[3] [4], யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
விநாயகரின் வேறு பெயர்கள்[தொகு]

வித்தியாசமான விநாயகர் சிலைபிள்ளையார்
கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது சைவ சமயத்தினரின் ஆழ்ந்த நம்பிக்கை. இதை வைணவர்களும் மறுப்பதில்லை.
தோற்றம்[தொகு]
விநாயகரின் தோற்றம் பற்றி பல்வேறு கதைகள் இந்து தொன்மவியலில் உள்ளன. சிவபெருமான் மற்றும் பார்வதி தம்பதியினர் யானைகளாக உருவம் தரித்து இன்பமாக இருந்து விநாயகரை பெற்றெடுத்தனர் என மகாபுராணங்களில் ஒன்றான இலிங்க புராணம் கூறுகிறது. [5]
சிவபெருமான் பார்வதி தேவியாரின் திருமணத்திற்கு பிறகு கையிலையில் அமர்ந்திருந்தனர். அங்குவந்த தேவர்கள் தாங்கள் தொடங்கும் எந்த காரியமும் சரியாக முடிவதில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். அதற்காக தேவர்களுக்கு அனுகிரகம் வழங்குவதாக சிவபெருமான் கூறினார். அத்தினம் சிவபெருமானும் பார்வதி தேவியாரும் யானைகளாக ரூபம் கொண்டு கையிலையின் காடுகளில் இங்கும் அங்கும் மகிழ்வாக இருந்தனர். அவர்களுக்கு யானை முகம் மனித உடலும் உடைய ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தையை எடுத்து மகிழ்ந்தார் பார்வதி தேவி. அக்குழந்தை தாயின் மடிவிட்டு இறங்கி கைகொட்டி தாண்டவம் ஆடியது. ஐந்து கைகளை உடைய குழந்தை என்பதால் ஐங்கரன் என்று அழைக்கப்பட்டார்.
கைலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது, தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான், தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.
காணபத்தியம்[தொகு]
இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு இக்கடவுளை மையப்படுத்தியதே ஆகும்.
இந்துக்களின் புராணக்கதைகள், இக்கடவுள், மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாக சித்திரிக்கிறது. முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் இக்கடவுள் கருதப்படுகிறது. இக்கடவுளின் வாகனமாக மூஞ்சூறு கருதப்படுகிறது.
வரலாறு[தொகு]
சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டுவந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இதற்கு வாதாபி கணபதி என்று பெயர். [6]
திருவுருவ விளக்கம்[தொகு]
திருவடி[தொகு]
ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.
பெருவயிறு[தொகு]
ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.
ஐந்துகரங்கள்[தொகு]
கொம்புகள்[தொகு]
தாழ்செவி[தொகு]
விநாயகர் மூர்த்தங்கள்[தொகு]
பொதுவாக யானைமுகமும், மனித உடலுமாக காட்சியளிக்கும் விநாயகர், பல்வேறு வடிவங்களிலும் கோவில்களில் காட்சியளிக்கிறார்.
நரமுக விநாயகர் - மனித முகத்துடன் காட்சியப்பவர். நடன கணபதி, நர்ததன கணபதி - நடனமாடும் விநாயகர். சித்தி, புத்தி கணபதி - மனைவிகளான சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிப்பவர்.
முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்=[தொகு]
1.உச்சிட்ட கணபதி
2.உத்தண்ட கணபதி
3.ஊர்த்துவ கணபதி
4.ஏகதந்த கணபதி
5.ஏகாட்சர கணபதி
6.ஏரம்ப கணபதி
7.சக்தி கணபதி
8.சங்கடஹர கணபதி
9.சிங்க கணபதி
10.சித்தி கணபதி
11.சிருஷ்டி கணபதி
12.தருண கணபதி
13.திரயாக்ஷர கணபதி
14.துண்டி கணபதி
15.துர்க்கா கணபதி
16.துவிமுக கணபதி
17.துவிஜ கணபதி
18.நிருத்த கணபதி
19.பக்தி கணபதி
20.பால கணபதி
21.மஹா கணபதி
22.மும்முக கணபதி
23.யோக கணபதி
24.ரணமோசன கணபதி
25.லட்சுமி கணபதி
26.வர கணபதி
27.விக்ன கணபதி
28.விஜய கணபதி
29.வீர கணபதி
30.ஹரித்திரா கணபதி
31.க்ஷிப்ர கணபதி
32.க்ஷிப்ரபிரசாத கணபதி
விநாயக சதுர்த்தி[தொகு]
விநாயக சதுர்த்தி குறித்த நிகழ்படம்
வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.
தமிழ் நாட்டின் சிறப்பு[தொகு]
மூஞ்சூறு வாகனத்தில் பிள்ளையார்.
தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூறையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் திருவிழா உற்சவங்கள்.

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளை யார் ஆலய திருவிழா உற்சவங்கள்.பத்தர்கள் படை சூழ ,மிகவும் சிறப்பபாக நடை பெற்றது அதன், {,புகைப்படங்கள், இணைப்பு},,,

                                       


























 








 



 

புதன், 26 பிப்ரவரி, 2014

தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்?

சைவ சமயத்தில் அறிவுச்சுரங்கமாக கருதப்படுபவர் தட்சிணாமூர்த்தி. இவர் ஞானத்தின் வெளிப்பாடாக கருதப்படும் அவதாரம். சரஸ்வதிக்கு அடுத்தபடியாக ஓலைச் சுவடியுடன் காட்சி தருபவரும் இவரே.
தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் அலைபாயும் மனது கட்டுக்குள் வரும். தன்னை வழிபடுபவரின் சிந்தனையை அஞ்ஞானத்தில் இருந்து ஞானத்திற்கு வழிநடத்திச் செல்லும் வலிமை இவருக்கு உண்டு.
வாழ்வில் எது நிலைக்கும், எது நிலைக்காதது என்பதை உணர்த்தக் கூடியவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறான பாதைக்கு செல்பவர்கள் இவரை வழிபட்டால் ஒழுக்கமான நல்வாழ்வைப் பெறலாம். இவரை வழிபடத் துவங்கினால் வாழ்வில் அமைதி ஏற்படும்.
குரு பகவானுக்கு உகந்த தினமான வியாழக்கிழமை, குருவுக்கான நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மற்றும் நாள்தோறும் வரும் குரு ஓரையிலும் (ஒரு நாளில் அந்த ஒரு மணி நேரம்) தட்சிணாமூர்த்தியை வழிபட உகந்த காலங்களாகும்.
இவரை வழிபடுவதன் மூலம் சந்தான பாக்கியம் பெறலாம். குழந்தைகளின் படிப்பிலும், அறிவுக்கூர்மையிலும் நல்ல முன்னேற்றம் தெரியும்.
கொண்டைக்கடலையை மாலையாக அணிவித்தும், வெள்ளை நிற மலர்களான முல்லை, மல்லிகை மலர்களால் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்களை அறியலாம்.
காளஹஸ்தி போன்ற பிரபல கோயில்களில் தட்சிணாமூர்த்தியை இறுதியாக வழிபடுவது ஏன்?
தட்சிணாமூர்த்தி சிவனுடைய ஒரு அவதாரம். மூலவரை சேவித்த பின்னரே அவரது மறுவடிவமான அவதாரங்களை வழிபட வேண்டும்.
பணம், புகழ், செல்வாக்கு போன்ற அனைத்தையும் வழங்கக் கூடியவர் சிவன். இவரது அவதாரமான தட்சிணாமூர்த்தி ஞானம், அறிவுச் செல்வத்தை அளிப்பவர்.
பணம், புகழ் என அனைத்தையும் பெறுபவர்கள் அதனை முறையாக பராமரிக்க முடியாமல் இழப்பதும் உண்டு. அதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க, ஞானத்தை வழங்கும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
இதன் காரணமாகவே மூலவரை (சிவன்) வழிபட்ட பின்னர் அவரது அவதாரங்களை வழங்க வேண்டும் என்ற வகையில் பிரபல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

சல்லிப்பிள்ளையார் புதிய சித்திர தேர் வெள்ளோட்டம்


விஜய வருடம் மாசி திங்கள் 1ம் நாள்(13.02.2014) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை பொலிகண்டி சல்லிப்பிள்ளையார்ஆலயத்துக்கான புதிய தேரின் வெள்ளோட்ட விழா நடைபெற்றது..காணொளி.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

கௌசல்யா தேவி சோகம்


கௌசல்யா தேவி சோக மிகுதியினால் தசரதரிடம் ‘எனக்கு நீங்களும் இல்லை. என் மகனையும் காட்டிற்கு அனுப்பி விட்டீர்கள். எல்லோரையும் நிர்கதி ஆக்கி விட்டீர்கள்’ என்று சொல்கிறாள். தசரதர் ‘எதிரியிடமும் கருணை செய்யும் இயல்பு கொண்ட நீ மிகவும் துக்கத்தில் இருக்கும் உன் கணவனான என்னிடம் கருணை செய்.’ என்று கைகூப்பி வேண்டுகிறார். கௌசல்யை தரையில் விழுந்து வணங்கி ‘கணவனை கெஞ்ச விடும் பெண் நரகத்தை அடைவாள். சோகத்தால் ஏதோ பேசிவிட்டேன். நீங்கள் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றவே இதைச் செய்தீர்கள் என்று அறிவேன். என்னை மன்னித்து விடுங்கள்.’ என்று சமாதானம் செய்கிறாள்.
 

வால்மீகி ராமாயணம் என்னும் தேன்


தசரதர் காலகதி அடைந்ததை அறிந்து கௌசல்யா தேவியியும் மற்ற மனைவிகளும் புலம்பி அழுகிறார்கள். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்குகிறது. எல்லோரும் கைகேயியை திட்டுகிறார்கள். மந்த்ரிகளும் பெரியோர்களும் தசரதரின் உடலை எண்ணெய் குடத்தில் பத்திரப் படுத்திவிட்டு சபையைக் கூட்டுகிறார்கள். ‘அரசன் இல்லாதிருந்தால் நாட்டிற்கு பல கேடுகள் விளையும். அதனால் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும்’ என்று அவர்கள் வசிஷ்டரிடம் வேண்டுகிறார்கள்.

வியாழன், 30 ஜனவரி, 2014

சோமவார விரதம் தோன்றிய வரலாறு


சந்திரன் கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் தோன்றினான். சந்திரன் பெயரால் சோமவார விரதம் தோன்றியது. சந்திரன் சிவனை ஆராதித்ததும், கிருத யுகம் தோன்றியதும், சந்திரனை சிவபெருமான் சிரசில் அணிந்ததும் கார்த்திகை சோம வாரத்தில் தான்.
தட்சபிரஜாபதி தன் மகள்களை தனித்தனியாக மணம் செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தந்து 27 மகள்களான, கார்த்திகை, ரோகிணி, மிருகசீருஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்,
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான சந்திரனுக்கு மணம் புரிவித்தான்.

ஆனால் சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும் மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். அதனால் மனம் நொந்த மற்ற பெண்கள் தங்கள் தந்தையிடம் சென்று முறையிட்டனர். ஆத்திரமடைந்த தட்சன் சந்திரனுக்கு சாபம் கொடுத்தான்,
அதனால் சந்திரன் தனது கலைகளை இழந்தான் அவனை குஷ்ட நோயும் பீடித்தது. தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட் கிழமைகளிலும்
 எம்பெருமானை கடல்தனில் அமுதொடு கலந்த
 நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல்
 விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி
 யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு
 கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி

 சங்கரனை நினைத்து விரதம் அனுஷ்டித்தான், அவனது விரததிற்கு மகிழந்த பரம கருணாமூர்த்தியான எம்பெருமான் அவனுக்கு சாப நிவர்த்தி அளித்தார் அதனால் சந்திரன் தான் இழந்த சோபையை பெற்றான், ஆயினும் பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து பௌர்ணமியன்று
 பூரண சந்திரனாக திகழ்ந்து பின் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் வண்ணம் எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும் தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார் கருணைக் கடலாம் சிவபெருமான். 

சனி, 25 ஜனவரி, 2014

ஈவினை ஸ்ரீ கற்பகப்பிள்ளையார்

" தேனமுத புகழ்பாடும் ஈசனின் திருப்புதல்வா முழுமதி வதனம் உருவான சக்தி சமைந்த திருவுருவா தந்தைதனை எதிர்த்து தலைமாறி வந்த கஜமுகா உனதருள் வேண்டும் பக்தருக்கு என்றும் வரமருள்வாய் ஈசா! "

nilavarai.net